போட்டோகிராபர் திரைவிமர்சனம் ரேட்டிங் 2.6/5

போட்டோகிராபர்
நடிகர்கள்:அஷ்ரஃப் @ வீரா ஜனனி சாமிநாதன் @ தர்ஷினி கருணாகரன் @ கபிலன் உரியடி சிவா @ மதி ஆடுகளம் நரேன் @ செங்குட்டுவன்
தேவி மகேஷ் @ ஆதினி
எழுத்து & இயக்கம் : அஷ்ரஃப் தயாரிப்பு : அப்துல் பாசித் சையத் இணை தயாரிப்பு : முகமது ஃபெரோஸ் கிரியேட்டிவ் புரொட்யூசர் : சந்திரு KN
ஒளிப்பதிவு : ரயீஸ் அஹ்மத் இசை : ராஜ்குமார் சந்திரசேகரன் படத்தொகுப்பு : RC பிரணவ் சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன்



கதை ஓபன் பண்ணா….!
அஷ்ரப் . தொழிலதிபர் ஆடுகளம் நரேன் தேவி மகேஷ் இவர்கள் மகன் ..அஷ்ரஃப். தனக்கென்ற தனித்துவமாக வாழ வேண்டும் என்று ஆசைபடுகிறார். புதுமையாக சாதிக்க வேண்டுமென்று எண்ணத்தில் இருக்கும் அஷ்ரஃப் கொடைக்கானலில் உள்ள ஆபத்தான மதிகெட்டான் சோலை வனத்தில் அதிசய தங்க மரம் இருப்பதுபோல் கனவு காண்கிறார். அந்த மரத்தை போட்டோ எடுக்க கொடைக்கானலுக்கு செல்கிறார்.
ஆனால் அந்த காட்டுக்குள் சென்றவர்கள் யாரும் இதுவரை உயிருடன் திரும்பவில்லை ஆகையால் அங்கு போகாதீர்கள் என்று பலர் அஷ்ரஃபுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள் .ஆனாலும் ரிஸ்க் எடுத்து செல்கிறார்.. அதன் பிறகு அந்த காட்டுக்குள் நடந்தது என்ன.? தங்க மரத்தை போட்டோ எடுத்தாரா.? அதன் பின்னர் நடந்தது என்ன என்பதெல்லாம் திரில்லர் கதை..
அஷ்ரப் இவர்தான் நாயகன் மற்றும் இயக்குனர் .. எனவே அவருக்கான
காட்சிகள் அதிகமாக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.. காதலி இருந்தும் காதல் இல்லை ..காட்டில் கூட காதலியோடு போய் இருக்கலாம் ..அது இன்னும் பதட்டத்தை கூட்டி இருக்கும் ..!



அஷ்ரப் அம்மாவாக நடித்த தேவி மகேஷ் படத்திற்கு மிகப்பெரிய பலம்.. அவரின் அட்வைஸ் ஒவ்வொன்றும் ரசிக்க வைக்கிறது….! ஜனனி… இந்த படத்தின் நாயகி.. அவ்வளவு தான் ..வந்து போறாங்க
கருணாகரன், ஆடுகளம் நரேன், உறியடி சிவா, வேலராமமூர்த்தி உள்ளிட்டோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்..பிளாஷ் பேக் காட்சிகள் படத்திற்கு பலம்.. பார்த்த காட்சிகளே திரும்ப திரும்ப வருவது சற்று திரை கதையில் தொய்வு …! காட்டில் அமானுஷ்யங்கள் நமக்கு பயத்தை தரவில்லை .
ஒளிப்பதிவு ஓகே ..பின்னணி இசை பரவாயில்லை ..திரைக்கதை இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் .”போட்டோகிராபர் “படத்தின் இயக்குனரே நடிகராக அஷ்ரப் சிறப்பாக நடித்துள்ளார் .இந்த படத்தை அனைவரும் பார்க்கலாம் .
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 2.6/5



