ஜி.டி.என் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.6/5

ஜி டி என்
நடிப்பு: மாதவன, சத்யராஜ், பிரியாமணி, ஷீலா ராஜ்குமார், துஷாரா விஜயன், அதிதி பாலன், ஜெயராம், வினை ராய், கருணாகரன் மோகன்ராம், தம்பி ராமையா, பிரகடா சாகர், சில்பா ஸ்ரீகுமார்
தயாரிப்பு:ஆர்.மாதவன் சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் இசை: கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு: அரவிந்த் கமல் நாதன்
இயக்கம்: கிருஷ்ணகுமார் ராம்குமார் பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா (D’One), நாசர்

கதை ஓபன் பண்ணா….!
கோவை கலங்கல் கிராமத்தில் 1893-ஆம் ஆண்டு மார்ச் 23 இல் பிறந்த இவரின் முழுப் பெயர் கோபால்சாமி துரைசாமி நாயுடு. அதன் பெயர் சுருக்கமே ஜிடிநாயுடு..
ஜி டி நாயுடு இளம் பருவத்தில் புத்தகப் படிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் அனுபவப் படிப்பு அதிகம் பெற்றவர். ஜிடிநாயுடுவாக நடித்திருக்கும் மாதவன் ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் ரூ.250க்கு ஒரு மோட்டார் சைக்கிளை விலைக்கு வாங்குகிறார். உடனே அந்த மோட்டார் சைக்கிளை அக்குவேறாக ஆணி வேறாக பிரித்து அதன் தொழில் நுட்பத்தை அறிந்து கொள்கிறார்.பிறகு மின்சாரத்தில் இயங்கும் ஒரு மோட்டாரை தயாரிக்கிறார். வீட்டுக்கு வெங்காயம் வெட்டுவத்ற்கு ஒரு கருவியை கண்டுபிடித்து தன் மனைவிக்கு கொடுக்கிறார்.
இப்படி ஒரு விவசாய ஏழை குடும்பத்தில் பிறந்த ஜிடிநாய்டு படிப்படியாக புதிய கண்டுபிடிப்புகளை செய்து‘யுனைடெட் மோட்டார் சர்வீஸ்’ என்ற கூட்டுறவு நிறுவனத்தைத் தொடங்கி சாதனை படைக்கிறார். பாசசாலை படிப்பறிவு இல்லாமல் தன் சொந்த அறிவால் விஞ்ஞானி ஆகி பெரும் செல்வந்தராகிறார். ஆனால் இவரின் வருமானத்துக்கு முறையாக வருமான்வரி கட்டாமல் அரசை ஏமாற்றுகிறார். இவரிடம் எப்படியும் வருமானவரியை வசூல் செய்தே ஆகவேண்டும் என்று வருமானவரி அதிகாரி ஜெயராமன், மாதவனுக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார். அரசாங்கம் இவரின் அலுவலகத்தையும் விட்டையும் பூட்டி ஜப்தி செய்கிறது. வங்கி கணக்குகளை முடக்குகிறது. அத்தனையும் எதிர்கொள்கிறார். ஜெயராமன் கொடுக்கும் பல தொந்தரவுகளில் இருந்து மாதவன் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

ஒட்டு மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஜிடி நாயுடு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் மாதவன்.. 1930 அந்த காலகட்டத்திற்கு ஏற்ப உடல் மொழி.. அரசுக்கு அடிபணியாத நேர்மை.. உழைப்பாளி உன்னதமான மனிதர், எளிமையான உள்ளம் படைத்த மாமனிதர் என பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார் மாதவன்..
மாதவனுக்கு நிகராக சத்யராஜ் மற்றும் ஜெயராம்.. இருவரும் தங்களுடைய அனுபவ நடிப்பில் போட்டி போட்டு நடித்துள்ளனர்..நேர்மையாக இருந்தாலும் உயர் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் அதிகாரியாக ஜெயராம்..
இவர்களுடன் பிரியாமணி, துஷாரா விஜயன், ஷீலா, பிரிகிடா, வினய், அதிதி பாலன், கருணாகரன் உள்ளிட்ட பல கேரக்டர்களும் படத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளது..கோவிந்த் வசந்தா இதில் தேவையான அளவு ரசிக்கும் படியாக பின்னணி இசை கொடுத்திருக்கிறார்..இயக்குனரும் இந்த படத்தில் என் எஸ் கே கேரக்டரில் தோன்றி சில காட்சிகள் வருகிறார்..


நம்ம தமிழக விஞஞானி GDN பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை தேடி தேடி இந்த பட குழு கடுமையாக உழைத்துள்ளார்கள் இயக்குனர் மற்றும் படத்துக்கு உயிர் kodutha மாதவன் அனைவருக்கும் நம்ம tamil prime news பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது…!
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.6/5



