கர திரைவிமர்சனம் ரேட்டிங் 4.2/5

கர  திரைவிமர்சனம்  ரேட்டிங் 4.2/5

கர

நடிப்பு : தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், சுராஜ் வெஞ்சாராமூடு, ப்ரித்வி பசண்டியராஜன், ஸ்ரீ ஜா ரவி

தயாரிப்பு : ஐசரி கணேஷ்     இசை : ஜிவி பிரகாஷ்குமார்    ஒளிப்பதிவு :தேனி ஈஸ்வர்    இயக்கம் : விக்னேஷ் ராஜா

பி ஆர் ஓ : சதீஷ் (AIM ), ரியாஸ் கே அஹமத்,   ரிலீஸ்: ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன்பன் உதயநிதி

கதை open பண்ணா ….!

நாயகன் கர சாமி சுயமாக தொழில் தொடங்க தனது அப்பா கே எஸ் ரவிக்குமாரிடம் பணம் கேட்க அவர் கொடுக்காததால் ,முதன் முதலில் தந்தை வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு செல்கிறார் தனுஷ்..அப்பாவிடம் திருடிய பணத்தை ஒரு சூழல் இழக்க நேர்கிறது ..அதனைத் தொடர்ந்து .திருட்டு தொழிலாக வாழும் தனுஷ் ,நாயகி மமிதா பைஜூவை காதலிக்கிறார் அதனால் மனம் திருந்தி  திருட்டு தொழிலை விட்டு விலக நினைக்கும் தனுஷ் காதலியை திருமணம் செய்வதற்காக கடைசியாக ஒரு முறை திருட செல்கிறார் .

அதற்காக கூட ப்ரித்வி இரண்டு பேரும் திருவெறும்பூர் தொகுதி MLA வீட்டில் திருட செல்கின்றனர். அங்கு MLA அடியாட்கள் திடீரென வந்து விட ப்ரித்வி தப்பித்து விட தனுஷ் மாட்டி கொள்கிறார் அவரை பிடித்து போலீசில் ஒப்படைகிறார்கள், அங்கு ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக இருக்கும் சுராஜ் தனக்கு பாராட்டுக்களும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார் அதற்காக சுராஜ். கர மீது இந்த கொள்ளை கேஸோடு சேர்த்து அடுத்தது நிறைய பொய் வழக்குகளை இவர் மீது பதிய திட்டமிடுகிறார் …இதனை அறிந்த நாயகன் கர சாமி அங்கிருந்து தப்பித்து சொல்கிறார்

காதலியுடன் ஆந்திரா ரேணுகுண்டா தப்பிச் செல்லும் கர சொந்தமாக மெஸ் தொடங்கி நடத்த முடிவு செய்து வங்கியில் கடன் கேட்கிறான். அதற்கு அடமானம் கேட்கவே சொந்த ஊரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைக்க டாக்குமெண்ட் வாங்கி வர புறப்படும் கர ஊருக்கு சென்று முதலில் தன் மாமன் கருணாஸை சந்திக்கிறான் கருணாஸ் கர சாமியை கோபத்தில் திட்ட ஊர் திரும்ப நினைக்கும் வேளையில் தந்தை ரவிக்குமாரை சந்திக்கிறார்…! ,தந்தை மற்றும் அந்த ஊர் விவசயிகள் ஜெயராம் அதிகாரியாக வேலை பார்க்கும் வங்கியில் டிராக்டர் கடனுக்கு வாங்கி அதற்கு வட்டி கட்ட முடியாமல் தவித்து வருவதை அறிகிறான் . திடீரென்று ஒரு சூழலில் தந்தை ரவிக்குமார் மன  அழுத்தத்தில் இறக்கிறார். அவர் உடலை அவரின் சொந்த நிலத்தில் கூட அடக்கம் பண்ண வாங்கி அனுமதிக்காத நிலையில் தனுஷ் என்கிற கர எடுக்கும் முடிவு…!

அடுத்தடுத்து அங்கு எதிர்பாரத சம்பவங்கள் நடக்கின்றன. எந்த வாங்கி ஏமாற்றியதோ அதே வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்கிறான் கர அவருக்கு உறுதுணையாக கருணாஸ் மற்றும் ப்ரித்வி சேர்ந்து கொள்ள ஆட்டம் ஆரம்பிக்கிறது..இந்த சூழலில் காவல் துறை DSP சுராஜ் ஏற்கெனெவே கரசாமியை தேடி வரும் வேளையில் இந்த வாங்கி திருட்டு வழக்கை அவர் தன கையில் எடுத்து கொண்டு தனுஷை தேட ஆரம்பிக்கிறார் ..இந்த CAT & RAT கேம் தனுஷ் சுராஜ் இருவருக்கும் இடையில் நடக்க பரபறக்குது காட்சிகள்…! இறுதியில் வங்கியில் கொள்ளையடித்த பணத்தில் நிலத்தை மீட்டு அப்பா கே.எஸ்.ரவிக்குமாரின் உடலை தனுஷ் அடக்கம் செய்தாரா? போலீஸ் அதிகாரி சுராஜ் பிடியில் தனுஷ் சிக்கினாரா? என்பதுதான் ‘கர ’ படத்தின் மீதிக்கதை.

90 களில் வங்கியில் கடன் வாங்கிய விவசாயிகளின் அவல நிலை மறைமுகமாக வங்கி அதிகாரிகள் மக்களின் பணத்தை லேட் fee அதற்கு ஒரு தனி பீஸ் என்றஅவர்களுக்கு புரியாத விஷயங்களை சொல்லாமல் சொத்து பத்திரங்களை ஏமாற்றி கையெழுத்து அல்லது கைநாட்டு போட்டு வாங்கி வைத்து கொண்டு சொத்துக்களை ஏலம் விட்டு விடுவது ..இந்த படத்தில் மனம் வலிக்கும்  உண்மைகளை உரக்க சொல்லி உள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா..

ஜெயராம் அட்டகாசமான வில்லன் ரோல் மனுஷன் அசத்தியுள்ளார் .GV பிரகாஷ்குமார் இசை திரைக்கதையோடு உணர்வுகளை நமக்கு கடத்துகிறது ..KS ரவிக்குமார் அப்பாவாகவே கண் களனாக வைக்கிறார்கருணாஸ் பிருத்வி அனைவரும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர் ..காதலி மமிதா பைஜூ நல்ல எதார்த்தமான நடிப்பு அருமை ..அப்புறம் நம்ம ஹீரோ “கர”சாமி திரைக்கதையில் நடித்த தனுஷ் அடுத்த கட்ட நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நம்ம tamilprimenews.com ரேட்டிங் 4.2/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *