பிரேக் பாஸ்ட் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

பிரேக் பாஸ்ட் திரைவிமர்சனம் ரேட்டிங் 3.2/5

பிரேக் பாஸ்ட்

நடிப்பு :    ரானவ், ரோஸ்மின், சம்பத் குமார், கஸ்தூரி, அர்ச்சனா, கிருத்திக் மோகன், அமிதா ரங்கந்த், ரவி மரியா   

தயாரிப்பு:  கிரிஷா வரதராஜ்       இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்     இயக்கம் : ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா

கதை open பண்ணா ….!

காதலித்து   திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற நீதிமன்றம் செல்கிறார்கள். நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன், ஒரு மனநல மருத்துவரிடம் ஆலோசணை பெற இவ்விருவரையும் அனுப்பி வைக்கிறார். அநத மனநல மருத்துவரும், இவர்களுக்கு முன் தன்னிடம் ஆலோசனை பெற வந்த வேரொரு தம்பதியினரின் கதையை இந்த தம்பதியினரிடம் சொல்லி உண்மையான நிரந்தரமான வாழ்க்கை எது என்பதை இந்த தம்பதியினருக்கு உணர வைக்கிறார்.அந்தக் காதல் கதையில் தொழிலதிபர் நாயகி ரோஸ்மின் ஒரு ஏழை ராணவ் என்பவரை காதலிக்கிறார்.. அந்தக் காதல் கதையில் நடந்தது என்ன.? இறுதியில் விவகாரத்து முடிவு என்ன ஆனது.? காதலர்கள் பிரிந்தார்களா.? சேர்ந்து வாழ்ந்தார்களா.?

இந்த மருத்துவரின் ஆலோசணைய கேட்டபிறகு இவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தார்களா? இல்லையா? இவர்களுக்கு முன் ஆலோசனை பெறவந்த தம்பதியினரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.ராணவ், தனது முதல் படத்திலேயே மிகவும் அழுத்தமான மற்றும் சவாலான ஒரு கதாபாத்திரத்தில் ஒரு படித்த, நேர்மையான கிராமத்து இளைஞனாக விரக்தியையும், கௌரவத்தையும் மிகச் சரியாகப் பிரதிபலித்துள்ளார். ரோஸ்மின், பணக்காரப் பெண்களின் மனநிலையை எதார்த்தமாக பிரதிபலித்தது, காதலுக்காக எதையும் செய்யும் ஒரு துடிப்பான பெண்ணாகவும், பிறகு திருமண வாழ்க்கையில் ஏற்படும்  தானென்ற அகந்தை மோதல்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் பெண்ணாகவும் தனது நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியுள்ளார்…!

அமிதா ரங்கநாத், ஒரு நவீன பெண்ணின் மனப்போராட்டங்களை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு தேவையான துடிப்பையும், அதே சமயம் திருமண உறவில் ஏற்படும் விரிசல்களால் உண்டாகும் மன காயங்களையும் நேர்த்தியாகக் கையாண்டுள்ளார். கௌரவம் பார்க்கும் பெரிய தொழிலதிபராகவும், மகளின் மீது அதீத அன்பு கொண்ட தந்தையாகவும் சம்பத் ராஜ் மிக அழுத்தமான தொரு நடிப்பை வழங்கியுள்ளார். வயதான தோற்றத்தில் மனநல ஆலோசகராக கஸ்தூரி, தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மற்றும் ரவி மரியா ஆகியோர் நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் ரொம்ப சுமாராக உள்ளது மற்றும் காட்சிகளில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது…!

வழக்கறிஞர் கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி போகிறார் கஸ்தூரி     ராணவ், ரோஸ்மின், கஸ்துாரி, சம்பத், அர்ச்சனா, கிர்த்திக்மோகன், அமிதா  இரண்டு காதல் கதைகள்.. இரண்டிலும் காதலும் அதிகம் மோதலும் அதிகம்.. அழகான காதல் கதையை ஆரவாரமாகவே சொல்லி இருக்கிறார் இயக்குனர்..   ராணவ் – ரோஸ்மின்..   கிர்த்திக்மோகன் – அமிதா..இவர்களும் நிஜ தம்பதியராகவே வாழ்ந்திருக்கிறார்கள்.. இன்றைய காதல் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் அவர்களுக்கு வரும் ஈகோ மோதல் என அனைத்தையும் அழகாக வெளிப்படுத்தி நன்றாகவே ஸ்கோர் செய்துள்ளனர்..

திருமணமான தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போனால் வழக்கை சுவாரஸ்யமாக இருக்கும் விவாகரத்து வர வாய்ப்பில்லை ராசா என்று சொல்ல வருகிறார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா ..படக்குழு அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ….!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 3.2/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *