கொலைச்சேவல் திரைவிமர்சனம் ரேட்டிங் 2.4/5

கொலைச்சேவல் திரைவிமர்சனம் ரேட்டிங் 2.4/5

படம்: கொலைச்சேவல்

கலையரசன், தீபா பாலு, பால சரவணன்,  ஆதவ் சந்திரா, கஜராஜ், விஜய் சத்யா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி,, தனலட்சுமி மஞ்சுளா  தயாரிப்பு: ஆர்பி பாலா, கௌசல்யா பாலா   இசை: சாந்தன்   ஒளிப்பதிவு: பி ஜி முத்தையா  இயக்கம்  வி ஆர். துதிவாணன்  பி ஆர் ஓ : நிகில் முருகன்

கதை open பண்ணா ….!

கலையரசனும் தீபாவும் காதலர்கள். விரும்புகிறார்கள். இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதன்காரணமாக காதலர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடிப்போய் வெளியூரில் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துகிறார்கள், மூன்று மாதம் கழித்து தீபா கருவுருகிறாள். இந்நிலையில் தங்களது குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து சாமிகும்பிட்டால் குழந்தை குறைவின்றி பிறக்கும் என நம்புகிறார்கள்.

அதனால் தங்களது குலதெய்வத்துக்கு பொங்கல் வைக்க தங்களது சொந்த ஊருக்கு கலையரசனும் தீபாவும் வருகிறார்கள்….ஊருக்குள் வந்ததும் கலையரசனுக்கும் தீபாவுக்கும் எதிர்பாராத பயங்கர சம்பவம் ஒன்று நடக்கிறது. அது என்ன சம்பவம்? அதிலிருந்து கலையரசனும் தீபாவும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது கதைக்களம் ..!

நிறைசூலி, கோயிலில் சேவல் படையலிட்டு, வழிபட்டால் குழந்தை நன்றாக பிறக்கும் .என்ற ஐதீகத்துடன் கலையரசனின் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அவர் அக்கா ,அக்கா கணவர் , மற்றும் இரண்டு குழந்தைகள் என எல்லோரும் டிராக்டரில் செல்ல, கலையரசனும், அவரது மனைவியும், டூவீலரில் டாக்டரிடம் சென்று விட்டு, கோயிலுக்கு செல்கிறார்கள். இவர்களோடு ,,பால சரவணன், அவரது நண்பரும் அங்கு வருகிறார்கள்…!

இடைவேளைக்கு பிறகு படத்தை சுவாரஸ்யத்துடன் தொடங்குகிறார்கள். கலையரசனும் தீபாவும் எப்படி செல்போனில் பேசி காதலர்கள் ஆகிறார்கள் என்ற எபிசோட் மனதை நெகிழ வைக்கிறது….கஜராஜ் ,அவரது மகனும், டிவிஎஸ் வண்டியில் வரும் பொழுது பெட்ரோல் தீர்ந்து ஒரு குரூரமான இறுக்கமான முகத்தில் வருகிறார்கஜராஜ் யார் ..என்பது ஒரு சஸ்பென்ஸ் !!! அடுத்து ஆதவ் கும்பல் காட்டுக்குள் குடித்துவிட்டு ,சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் .அவர்கள் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அது என்ன?? என்பது அடுத்த சஸ்பென்ஸ்!!

.பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும் காளியும் அனுவும் புறப்பட தயாராகிறார்கள். அப்போது ஒரு கூட்டம் இருவரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி சாய்கிறது…!  அது என்னன்னா

ஆணவ கொலை  பற்றி சொல்கிறேன் என்று கொடூரமான ஆணவக் கொலை நடப்பதை காட்டினாலும் ….. .நிறைமாத கர்ப்பிணியை வெட்டி கொலை செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து அவள் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து…..சொல்லவே sorry எழுதவே உடம்பு நடுங்குகிறது …!

சென்சார் போர்டு இருக்கிறதா அப்படிங்கற சந்தேகம் வருது …இந்த காட்சியை அனுமதித்தது 

இயக்குனர் துதிவாணன் அந்த காட்சியை உங்களால் எப்படி எடுக்க மனம் வந்தது நீங்கள் நினைத்திருந்தால் அந்த காட்சியை தவிர்த்து இருக்கலாம் நெஞ்சை பதபதைக்க வைக்கும் இந்த ஒரு காட்சி கிளைமாக்ஸில் இருப்பதால் குடும்பத்தினர் இந்த படத்தை தவிர்க்க வாய்ப்பை நீங்களே உருவாக்கி உள்ளீர்கள்.

உண்மைக்கு அருகே படம் எடுக்கிறேன் என்கிற போர்வையில் சின்ன பையன் கையில் கத்தியோடு கொலை வெறியில் வருவது போல காட்டி இருப்பது சமூகத்துக்கு நீங்க என்ன சொல்ல வரீங்க இயக்குனர் அவர்களே …இப்படிப்பட்ட காட்சிகளை நீங்கள் தவிர்த்து இருக்க வேண்டும் மாறாக கொடூரமான இந்த கிளைமாக்ஸ் காட்சியில் அந்த போர்சனையாவது நீக்கிவிடுங்கள்….!

மற்றபடி நீங்கள் திரைக்கதை அதை கொண்டு போன விதம் பின்னணி இசை எல்லாமே அருமை படத்தில் நடித்திருந்தவர்களும் குறிப்பாக தீபா கலையரசன் பால சரவணன் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள் இந்த கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே உங்களை பாராட்ட மனம் மறுக்கிறது..!

நம்ம tamilprimenews .com ரேட்டிங் 2.4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *