கப்புள் பிரண்ட்லி திரைவிமர்சனம் ரேட்டிங் 4.1/5
கப்புள் பிரண்ட்லி
நடிப்பு: சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி தயாரிப்பு: அஜய் குமார் ராஜு இசை: ஆதித்யா ரவீந்திரன்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன் இயக்கம்: அஸ்வின் சந்திரசேகர் பிஆர்ஓ: சதீஷ் குமார் (S2 Media)

கதை open பண்ணா ….!
திருச்சியில் இருக்கும் சிவா, சைலஜாவுடன் பிரேக்அப்புடன் படம் தொடங்குகிறது.வேலை வெட்டிக்கு போகாத சிவாவை அவர் அப்பா கண்டித்ததால் சென்னைக்கு வருகிறார்.சென்னை வந்து பல கம்பெனிகளில் ஏறி இறங்கியும் இன்டீரியர் டிசைனரான அவருக்கு வேலை கிடைக்கவில்லை.ரூம் வாடகை கூட கொடுக்க முடியாமல் தவிக்கும் சிவா, நாயகி மித்ராவை சந்திக்கிறார்.திருநெல்வேலியைச் சேர்ந்த மித்ரா வேலை விஷயமாக சென்னை வந்து தனது தோழி ப்ரீத்தி உடன் தங்கி இருப்பதாக பொய் சொல்லிவிட்டு ஹாஸ்டலில் தங்கி இருக்கிறார்.அப்பா அம்மா அழைப்பு ஏற்று திருநெல்வேலி செல்வதற்காக பைக் டாக்ஸி ஓட்டும் சிவா வண்டியில் பயணிக்க, இருவரும் மனம் விட்டு பேச, நண்பர்கள் ஆகிறார்கள் .அந்த நட்பு காதல் ஆகிறது .லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்கிறார்கள்.சிவா மித்ராவின் உதவியுடன் தனது தொழிலில் வெற்றியைக் காண தொடங்குகிறார். அடுத்து என்ன நடக்கிறது? மித்ரா சிவா வாழ்வில் நுழைந்த பிறகு அவரது வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? அவர்களின் காதல் திருமணத்திற்கு வழிவகுக்கிறதா? அவர்கள் என்ன தடைகளை எதிர்கொள்கிறார்கள் சிவாவும், மித்ராவும்.அதிலிருந்து மீண்டார்களா என்பது தான் கிளைமாக்ஸ்….!

சிவா வாழ்வில் ஒரு பெண், ஒரு இளைஞன் உடன் ஒரு கண்ணியமான நட்பைப் பேண முடியும் என்பதை அழுத்தமாகச் சொன்ன இந்தத் திரைப்படத்தில், வில்லன் என்று எவரும் கிடையாது. என்றாலும் ஹீரோயின் ,ஹீரோ மாதிரியான மெல்லிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இருவருக்கும் இடையில் இருக்கும் சொல்லி இருக்கிறது காதலும், அதிலிருக்கும் கண்ணியமும், மெளனமும் சோகமும் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளாக விரிகிறது.
களையான முகம் சந்தோஷ் சோபன், ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறார், தலையைச் சற்று உயர்த்தியபடி மானஷா சிரிப்பது அவரின் மேனரிசம். மிக இயல்பான தோற்றத்தில் கவருகிறார்….இருவரும் நடிப்பில் ஒருவரை ஒருவர் மிஞ்சி இருக்கிறார்கள். ஸ்ரீ ரஞ்சனி நாயகியின் அம்மாவாக வந்து குணச்சித்திர நடிப்பில் நம்மை கவருகிறார்.

படத்தின் பாடல்கள், மற்றும் இசை ,ரசிக்க வைக்கிறது.ஒளிப்பதிவு தினேஷ் புஷோத்தமன் ஒவ்வொரு frame கண்ணுக்குள் வண்ணக்கோலங்களை அள்ளி தெளிப்பது போல அவ்வளவு அருமை ..சென்னை யின் அழகு இவர் கண் வழி நம்ம பார்க்கும் பொது இன்னும் வியக்க வைக்கிறது …!ஒளிப்பதிவு கேரளா அழகையும் அழகாக காட்டப்பட்டிருக்கிறது
கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்அஸ்வின் சந்திரசேகர். மென்மையான ஒரு காதல் கதையை சொன்ன விதத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.காதலை விட காதலி மீது காதலன் கொண்ட தார்மீக அன்பு அவளை ஹாஸ்பிடல் சிறையில் இருந்து மீட்டு செல்வது கவிதை ..பிறப்பை கொண்டாடும் நாம் அது போல இறப்பை வரவேற்க பக்குவம் வேண்டும் என்பதை வசனம் மூலம் சொன்ன இயக்குனர் எவ்வளவு ஒரு சிந்தனைவாதி .கண்கள் கலங்கி திரை அரங்கை விட்டு வெளிவரும் ரசிகர்கள் …காதலைவேறு கோணத்தில் சொன்ன இயக்குனர்மற்றும் couple friendly டீம்அனைவருக்கும்பாராட்டுக்கள் ….!
நம்ம tamilprimenews .com ரேட்டிங் 4.1/5

